உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

செஞ்சி: செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வீட்டின் முன்பு நின்றிருந்த முதியவர் இறந்தார். செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால், 75; இவரது வீடு செஞ்சி - திண்டிவனம் பிரதான சாலையில் உள்ளது. இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த வேணுகோபால் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை