மேலும் செய்திகள்
ஸ்டுடியோ பூட்டை உடைத்து மூன்று கேமராக்கள் ஆட்டை
20-Nov-2024
அவலுார்பேட்டை : வளத்தி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மல், மாட்டல் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளத்தி அடுத்த கஞ்சமலைபுரவடை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் மனைவி சாரதா, 80; இவர், தனது மகன் சேகர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வெளியே சென்ற சேகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சாரதாவின் காதை அறுத்து அவரது 10 கிராம் கம்மல், மாட்டலை மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Nov-2024