உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனவளக்கலை மன்றம் ஒருநாள் சிறப்பு பயிற்சி

மனவளக்கலை மன்றம் ஒருநாள் சிறப்பு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் காயகல்பம் ஒருநாள் சிறப்பு பயிற்சி நடந்தது. தலைவர் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவபிரகாசம் வரவேற்றார். தனிமனித அமைதி குறித்து பேராசிரியர் விவேகானந்தன் விளக்கமளித்தார். பேராசிரியை செந்தமிழ்செல்வி, காயகல்பம் குறித்து விளக்கி பயிற்சி அளித்தார். இதில், பேராசிரியர்கள் ராஜ்காந்த், தேன்மொழி, முத்துக்குமரன், ஷியாமளாதேவி ஆகியோர் உடற்பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியை தனஞ்செயன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ