உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்குகள் மோதல் ஒருவர் பலி

பைக்குகள் மோதல் ஒருவர் பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்ராஜ், 48; இவர், நேற்று முன்தினம் அரசூரில் இருந்து பண்ருட்டி நோக்கி பைக்கில் சென்றார்.அப்போது பின்னால் வந்த பைக் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் சங்கர் ராஜ் படுகாயமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ