உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊராட்சி தலைவர் தாக்கு போலீஸ் விசாரணை

ஊராட்சி தலைவர் தாக்கு போலீஸ் விசாரணை

மரக்காணம்: திண்டிவனம் அருகே ஊராட்சி தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மரக்காணம் ஒன்றியம், ஆத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்னார்,70; ஊராட்சி தலைவர் மற்றும் அ.தி.மு.க., கிளைச் செயலாளர். இவரை, அதே ஊரை சேர்ந்த தி.மு.க., கிளைச் செயலாளர் ஏழுமலை,45; நேற்று காலை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மன்னார் போனை எடுக்கவில்லை.அதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மன்னாரை தேடிச் சென்று அவரை திட்டி, தாக்கினார். அதில், காயமடைந்த மன்னார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை