உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மருதுபாண்டியன், 22; இவர், 17 வயது சிறுமியிடம், கடந்த ஓராண்டாக காதலித்து நெருங்கிப் பழகி வந்துள்ளார்.இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 18ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், மருதுபாண்டியன் மீது, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை