வாலிபர் மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம் : விழுப்புரத்தில் வாலிபர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் ரகு மகன் தினேஷ், 30; சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.