உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளம் பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம் பெண் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: காணை அருகே இளம் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த சென்னகுணத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் சுமித்ரா, 18; இவர், பிளஸ் 2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 3ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி