உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கெடார் அரசு மகளிர் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

கெடார் அரசு மகளிர் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

விழுப்புரம்: கெடார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தினமலர் சார்பில், கல்வி சேவையாக மாணவர்களுக்கான 'பட்டம்' இதழ் வெளியாகிறது. இந்த சிறப்பிதழ், பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும், மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்களை வழங்கி வருகிறது. மாணவர்களுக்காக இந்த சிறப்பிதழ், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வெளியாகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகளையும் நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கெடார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், விழுப்புரம் சரஸ்வதி கல்வி குழுமம் சார்பில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முடி தலைமை வகித்தார். ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார். விழுப்புரம் சரஸ்வதி கல்வி குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் ஆகியோர், பள்ளி மாணவிகளுக்கு பட்டம் இதழ்களை வழங்கி, அதன் சிறப்புகளை விளக்கி பேசினர். ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !