பிரதமரின் கல்வி உதவித்தொகை : விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம்: இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: இதர பிற்படுத்தப்பட்டோர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26ம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சம். மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாக்க வரும் நவ., 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National Scholarship Portal) Renewal Appli cation என்ற இணைப்பில் சென்று ஒ.டி.ஆர்., நம்பர் பதிவு செய்து 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தை புதுப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் ஒ.டி.ஆர்., நம்பர் மற்றும் கடவுச்சொல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். அந்த நம்பரை பயன்படுத்தி, 2025-26ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியதாக விண்ணப்பிக்கலாம். பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய தொடர்புடைய சி.இ.ஓ.,வை தொடர்பு கொள்ளலாம். அல்லது https;//bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம். கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பரிசீலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.