உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் குறைகேட்பு கூட்டம் 555 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைகேட்பு கூட்டம் 555 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 555 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை செய்து தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா், ஆதரவற்றோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 555 மனுக்கள் பெறப் பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை கால் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை