உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெஞ்சல் புயல், வெள்ள நிவாரணம் கேட்டு பல இடங்களில் சாலை மறியல் போராட்டம்

பெஞ்சல் புயல், வெள்ள நிவாரணம் கேட்டு பல இடங்களில் சாலை மறியல் போராட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. பல இடங்களில் நிவாரணம் வழங்கவில்லை என, பொது மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் நகராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெரு, கமலா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என, அ.தி.மு.க., கவுன்சிலர் ராதிகா செந்தில் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 10:20 மணிக்கு, சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி ரயில்வே பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.டவுன் சப் - இன்ஸ்பெக்டர் பிரியங்கா, வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து, 11:20 மணி வரை மறியலில் ஈடுபட்டதால், விழுப்புரம் - சென்னை மார்க்கத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.அதுபோல, விழுப்புரம் வி.மருதுார், சந்தானகோபாலபுரம், பஞ்சமாதேவி கிராம மக்கள், செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் வராகநதி ஆற்று பாலத்தில், அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.மேலும், மேல்மலையனுார் அருகே வள்ளலார் மடம் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு மக்கள், வடவனுார், நங்கிலிகொண்டானில் அப்பகுதி மக்கள், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், செஞ்சி - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
டிச 11, 2024 08:47

திருடனிடம் பணம் குடுத்து திருப்பணி செய்யச் சொன்னானாம். மேலேருந்து வரும்போதே இதே கதைதான்.


அப்பாவி
டிச 10, 2024 16:45

சித்தே பொறுங்கப்பா... இப்பத்தான் மிட்ச்சம் புயல், தாணா புயலுக்கு நிவாரணம் அனுப்பிச்சிருக்காங்க. உங்களுக்கு நிவாரணம் அடுத்த வருஷம் தான்.


ராமகிருஷ்ணன்
டிச 10, 2024 16:38

நடப்பது விடியல் அரசு. மத்திய அரசு பணம் கொடுத்து விட்டது. ஆனால் இவர்கள் பணம் தரவில்லை என்று தான் சொல்வாங்க. அந்த ஏரியா ரேஷன் கடை யில் இருந்து கொண்டு திமுக கட்சியினர் சிலருக்கு மட்டுமே கொடுத்து விட்டு மிச்சத்தை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்கள்.


sankar
டிச 10, 2024 10:13

நிவாரணம் கேட்டு புண்ணியம் இல்லை மக்களே - நிரந்தர தீர்வே முக்கியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை