உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தல் லாரி பறிமுதல்

மணல் கடத்தல் லாரி பறிமுதல்

விழுப்புரம்: காணை அருகே ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். காணை சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார், நேற்று ஆயந்துார் கிராமத்தில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்த முயன்ற போது, டிரைவர் வாகனத்தை விட்டு விட்டு, தப்பி சென்றார். போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. பின், வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய ஆற்காடு கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் பூமிநாதன்,30; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை