உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் மோதி பள்ளி மாணவர் பலி

அரசு பஸ் மோதி பள்ளி மாணவர் பலி

விழுப்புரம் : வளவனுார் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் இறந்தார். மற்றொரு மாணவர் காயமடைந்தார்.வளவனுார் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் கவுதம் (எ) அய்யப்பன், 13; இவர், வளவனுார் அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மலை 5:30 மணிக்கு பள்ளி முடிந்த பிறகு, அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் படித்து வரும் நண்பர் கவின்,12; என்பவருடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். சைக்கிளை அய்யப்பன் ஓட்டினார்.விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில், வளவனுார் தொட்டி பகுதி அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில், கீழே விழுந்த கவுதம் என்கிற அய்யப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பலத்த காயமடைந்த கவின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை