மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி மாயம்
15-Aug-2025
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார். வீடூர் அடுத்த கல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஆர்த்தி, 19; இவர், பேரணி கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி கல்லுாரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் புஷ்பராணி அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Aug-2025