உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு தீ பற்றி எரிந்து சேதம்

கரும்பு தீ பற்றி எரிந்து சேதம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கரும்பு தீப்பிடித்து எரிந்து சேதமானது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 40; விவசாயி. இவர், அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி