மேலும் செய்திகள்
நீர் மோா் பந்தல் திறப்பு
28-Apr-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம், தென்மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் மாவட்ட செயலாளர் வடிவேல், விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தில் கண்காணிப்பு கேமராவை தன் சொந்த செலவில் பொருத்தினார்.கேமராவை இயக்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார்.விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன், கிராம தெருக்களில் அமைக்கப்பட்ட கேமிரா இயக்கும் அறையை திறந்து வைத்து பேசினார்.சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், இணைச் செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர்கள் காமராஜ், பிரித்திவிராஜ், நிர்வாகிகள் குமரேசன், பாலச்சந்தர், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Apr-2025