மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி
விழுப்புரம் : விழுப்புரத்தில் பேபி கல்விக்குழுமம் மற்றும் கே.ஜி., வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் திறனாய்வு மற்றும் தனித்திறன் போட்டி நடந்தது.குழந்தைகள் தினத்திற்காக நடந்த போட்டிக்கு, தாளாளர் சுந்தர் தலைமை தாங்கினார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பவுலின் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முதல்வர் நீலா நன்றி கூறினார்.