உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிக்கன் நுாடூல்ஸ் சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்

சிக்கன் நுாடூல்ஸ் சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிக்கன் நுாடூல்ஸ் சாப்பிட்ட வாலிபர், திடீரென மரணம் அடைந்தார். விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் மனோஜ்குமார்,24; இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் சிக்கன் நுாடூல்ஸ் சாப்பிட்டு படுத்தார். தொடர்ந்து அவருக்கு உடல் உபாதை மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. பெற்றோர் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்ததை உறுதி செய்தனர்.இதுகுறித்து கருணாநிதி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை