உள்ளூர் செய்திகள்

கொத்தனார் பலி

விழுப்புரம் : கோவில் சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த கொத்தனார் இறந்தார். விழுப்புரம் அடுத்த ஆலாத்துாரை சேர்ந்தவர் சண்முகம், 62; கொத்தனார். இவர், தனது வீட்டின் அருகில் புதியதாக கட்டிவரும் கோவிலில், சாரத்தின் மீது ஏறி வேலை செய்தார். அப்போது, தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி