உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சகோதரர்களை தாக்கியவர் கைது

சகோதரர்களை தாக்கியவர் கைது

விழுப்புரம்: காணை அருகே சகோதரர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காணை அடுத்த கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் நாராயணன், 30; ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவர், நேற்று முன்தினம் கோனுாரில் வியாபாரம் செய்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மதியழகன்,27; குடிபோதையில் தகராறு செய்தார்.இதையறிந்த நாராயணன் உறவினர் வினாயகமூர்த்தி, 31; இவரது தம்பி வீரா, 28; ஆகியோர் மதியழகனிடம் தட்டிக் கேட்டனர். ஆத்திரமடைந்த மதியழகன், சகோதரர்கள் இருவரையும் தாக்கினார்.புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து மதியழகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை