உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்

ஆற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 35; விவசாயி. இவர், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் தனது மகன் சுதேஷுடன்,14; நிலத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பினார். சங்கராபரணி ஆற்றை கடந்தபோது, ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். உடன், அங்கிருந்தவர்கள் சுதேைஷ காப்பாற்றினர்.தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்புபடை நிலையத்தினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்தை தேடும் ணியில் ஈடுபட்டனர். மாலை 6:00 மணிக்குப்பின் இருட்டி விட்டதால் தேடும் பணியை கைவிட்டு இன்று தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை