உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீவனுார் விநாயகர் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

தீவனுார் விநாயகர் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர். கோவிலில், பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 7ம் தேதி காலை 9:00 மணிக்கு 1008 பால்குடம் ஊர்வலம் நடந்தது.உற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 6:00 மணியளவில், விநாயகருக்கு மகா அபிேஷகம் நடந்து. 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. திரளாகபக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவில், சிவக்குமார் எம்.எல்.ஏ., மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, வர்த்தகர் அணி தலைவர் செல்லபெருமாள், மயிலம் தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீரா சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று 10ம் தேதி மாலை 5:00 மணியளவில் தீர்த்தவாரியும், நாளை 11ம் தேதி முத்துபல்லக்கும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை