உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற மூன்று பேர் கைது

குட்கா விற்ற மூன்று பேர் கைது

விழுப்புரம்: வளவனுாரில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், அதே பகுதியில் உள்ள பங்க் கடையில் சோதனை செய்தனர். அப்போது, சைலாதீன்,63; என்பவரின் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.அப்போது இவர் கடைக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்யவந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் புதுச்சேரி மாநிலம், மடுகரையை சேர்ந்த அஜிமுத்துல்லா,23; என்பது தெரியவந்தது. பின், சைலாதீன், அசாருதீன், அஜிமுத்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1,190 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை