மேலும் செய்திகள்
செம்மண் கடத்திய லாரிகள் பறிமுதல்
12-Jun-2025
விழுப்புரம், : கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்த உதவி புவியியலாளர், போலீசில் ஒப்படைத்தார்.விழுப்புரம் விராட்டிக்குப்பம் அருகே உதவி புவியியலாளர் சரவணன் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தபோது, 5 யூனிட் கிராவல் மண் கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Jun-2025