உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

விழுப்புரம் : வளவனுாரில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் நேற்று வளவனுார் நகர பகுதியில் ரோந்து சென்றனர். பசார் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 38; புதுச்சேரி ஆண்டியார்பாளையம் குமார், 40; ஆகியோர், மூன்று நம்பர் லாட்டரி விற்றது தெரிந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுக்கான ஆவணங்கள் மற்றும் 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை