மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
01-Apr-2025
வானூர்: ஆரோவில் அருகே முதியவர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டிவனம் - புதுச் சேரி சாலையில், மொரட்டாண்டி டோல்கேட் அருகில் உள்ள கழிவறை வாசலில் நேற்று காலை 65 வயது முதியவர் இறந்து கிடந்தார். சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த முதியவர் யார் என தெரியவில்லை. ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Apr-2025