மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் உடல்
14-Apr-2025
வானுார்: அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து கிளியனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிளியனுார் பஸ் நிறுத்தத்தில் கடந்த 22ம் தேதி 70 வயது முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடல் நலக்குறைவால் இறந்த அவர், யார் என்ற விபரம் தெரியவில்லை.கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அடையாளம் தெரிந்தவர்கள், கிளியனுார் காவல் நிலையம், 949810-05532 என்ற மொபைல் எண்ணிற்கு தெரிவிக்கும் படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
14-Apr-2025