உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வைகை எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி

வைகை எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பராமரிப்பு பணி காரணமாக வழியில் நின்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மதியம் 1:30 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில், ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், ஒலக்கூர் - மேல்மருவத்துார் இடையே ரயில் நிறுத்தப்பட்டது. தண்டவாள பராமரிப்பு பணி முடிந்த பிறகு, ஒரு மணி நேரம் தாமதமாக அங்கி ருந்து ரயில் புறப்பட்டது. இதனால், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு மாலை 4:00 மணிக்கு வர வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், மாலை 5:05 மணிக்கு தாமதமாக வந்தது. இதனையடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து, மதுரைக்கு ரயில் புறப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ