உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

மயிலம்:திண்டிவனத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், பட்டா மாற்றத்திற்கு, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் புன்னைவனம், 47; விழுப்புரம் மாவட்டம், தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர். இவரிடம், திருவண்ணாமலை மாவட்டம், எச்சூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன், 35, என்பவர், தென்பசியார் கிராமத்தில் உள்ள வீட்டு மனைக்கு, பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்தார். இந்நிலையில், திண்டிவனத்தில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. அங்கு பணியில் இருந்த புன்னைவனம், பட்டா மாற்றத்திற்காக வந்திருந்த நாராயணனை, டீக்கடைக்கு வருமாறு அழைத்து, அவரிடம், 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டு பெற்றார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புன்னைவனத்தை கையும், களவுமாக கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M.Ramadundaram
செப் 29, 2025 12:59

Corrupt Officials and Officers should be posted in unimportant posts and transferred to far off places .


D.Ambujavalli
செப் 25, 2025 18:52

இந்தச் செய்தியில் உங்களுடன் ஸ்டாலின் எங்கே வந்தது? இப்படி 3000, 2000 என்று வாங்குபவர்களைப்பிடித்து மாதாந்திர வேலைக்கணக்கைக் காட்டிவிட்டு, கோடிக்கணக்கில், ஆயிரம் கோடிகளில் சேர்த்தவர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் அந்தப்பக்கம் போகாமல், அல்லது நாலு உதவாத ரசீதுகளை எடுத்துவிட்டு கள்ள மவுனம் காப்பதுதான் இவர்கள் வேலை.


முக்கிய வீடியோ