விழுப்புரம் வைகுண்டவாசர் கருட சேவையில் அருள்பாலிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.தொடர்ந்து, சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.