உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி உலகத்தர கல்விச் சேவையை வழங்குகிறது

வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி உலகத்தர கல்விச் சேவையை வழங்குகிறது

விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளாக உலகத் தரம் வாய்ந்த கல்விச் சேவையை வழங்கி வருகிறது.அரசூரில் கடந்த 1994ம் ஆண்டு எஸ்.பி.எஸ்., கல்வி அறக்கட்டளையால் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி துவங்கப்பட்டது. கல்லுாரி தலைவர் சரவணன், செயலாளர் ராமநாதன் ஆகியோர் தலைமையில் சீரிய முறையில் இயங்குகிறது.கிராமப்புற மாணவர்களை சிறந்த பொறியாளர்களாக உருவாக்கும் நோக்கில், கல்லுாரியில் 6 இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளும், ஒரு முதுநிலை பொறியியல் பட்ட மேற்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.தரம் மேம்படுத்தப்பட்ட ஆய்வக வசதிகள், சுத்தமான சுற்றுச்சூழலை அங்கீகரிக்கும் வகையில் இந்த கல்லுாரிக்கு தரச்சான்றிதழ் கடந்த 2008ம் ஆண்டு அளிக்கப்பட்டது. பின், கல்லுாரி பாராட்டத்தக்க வளர்ச்சி மூலம் கடந்த 2013ம் ஆண்டு நடந்த மறு ஆய்விலும் மறு உயர்தர சான்றிதழ் அளிக்கப்பட்டது.கல்லுாரியின் குறிக்கோள் தேர்ச்சி விகிதம் உயர்த்துதல். உலகத்தரமான பொறியியல் வல்லுநர்களாக தயார்படுத்துதல். திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தருதல். ஆராய்ச்சி மனப்பான்மை ஊக்குவித்தல், தலைசிறந்த பொறியியல் நிறுவனங்களோடு புரிந்துணர்வு கொள்வது. இவைகளை பாராட்டும் விதத்தில், டில்லி என்.பி.ஏ., என்ற தேசிய தரச்சான்றிதழ் அமைப்பு கடந்த 2012ம் ஆண்டு உயர்தர சான்றிதழ் அளித்துள்ளது.மேலும், நாக் அமைப்பும் தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது. 2019 ம் ஆண்டு மறுஆய்வு நடத்தி மீண்டும் உயர்தர சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய கருத்தரங்கம், பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.இங்கு, மாணவர்கள் 2ம் ஆண்டு பயிலும் போதே வேலைவாய்ப்பிற்கான சிறந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாணவ, மாணவிகள் பல்வேறு நிறுவனங்களில் பணி பெற்றுள்ளனர்.மேலும், சிறந்த நுாலக வசதி, நவீன வசதிகளோடு கூடிய உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. சென்னை பல்கலைக்கழக தேர்வு தரப்பட்டியலில் கல்லுாரி மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்ணை பெற்று சாதித்துள்ளனர்.கிராமப்புற மாணவர்கள் எந்த சூழலில் இருந்தாலும், கடின முயற்சி, உத்வேகத்தோடு கொடுக்கும் பயிற்சியால், அவர்கள் சிறந்த வல்லுநர்களாக மாற்ற முடியும் என்ற உறுதியோடு இக்கல்வி நிறுவனம் பாடுபட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி