உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி பெண் பலி

வாகனம் மோதி பெண் பலி

மயிலம் ; அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் பலத்த அடிபட்டு இறந்தார். சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 40; இவரது மனைவி பத்மா, 36; இவர் கடந்த வாரம் சென்னையில் இருந்து அவருடைய தாய் வீடான விக்கிரவாண்டி அடுத்த சித்தேரி கிராமத்திற்கு வந்துள்ளார். பின்னர் கிராமத்திலிருந்து நேற்று முன்தினம் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அன்று இரவு 8:30 மணி அளவில் மயிலம் அருகே உள்ள கன்னிகாபுரம் கிராம பஸ் ஸ்டாப்பிங்கில் ் இறங்கி நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பத்மா சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை