உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை

வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம் அடுத்த கணபதிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 67; கூலித் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 9ம் தேதி வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை