உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது

ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது

திண்டிவனம்: பொது இடத்தில் ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், செஞ்சி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, ஊரல் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வினோத், 24; என்பவர் பொது இடத்தில் ஆபாசமாக திட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது. திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ