பைக் மோதி வாலிபர் பலி
திருவெண்ணெய்நல்லுார்:வீட்டின் முன் துாங்கி கொண்டிருந்த வாலிபர் மீது பைக் மோதி உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கூரானுாரை சேர்ந்தவர் கணேசன் மகன் செல்வமணி,38; கூலி தொழிலாளி. இவர் கடந்த 6ம் தேதி இரவு 9:45 மணியளவில் அவரது வீட்டின் முன்பக்க வாசலில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத பைக் செல்வமணி மீது ஏறி சென்றது. இதில் காயமடைந்தவரை உறவினர்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வமணி நேற்று அதிகாலை 4:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.