மேலும் செய்திகள்
முதுகுளத்துார் பள்ளியில் மாணவர்கள் தவிப்பு
24-Aug-2024
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழ தாயில் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழ தாயில் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு தலைமையாசிரியர் ஒரு உதவி ஆசிரியர் பணி புரிகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடம் சேதம் அடைந்த நிலையில் அருகில் உள்ள இரு வகுப்பறை கட்டடத்தில் பள்ளி இயங்கி வருகின்றது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே வகுப்பறை கட்டடத்தில் படிப்பதால் மாணவர்கள் சிரமப்படுவதோடு ஆசிரியர்களும் பாடம் நடத்த சிரமப்படுகின்றனர்.இதனைத் தொடர்ந்து இக்கட்டடத்தின் அருகிலேயே உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023 ல் ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் இரு வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. கட்டடத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் தற்போது வரை இட நெருக்கடியிலேயே படிக்கின்றனர். எனவே புதிய வகுப்பறை கட்டடத்திற்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்தி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
24-Aug-2024