இடுபொருட்கள் பெற அழைப்பு
விருதுநகர் : வேளாண் இணை இயக்குனர் விஜயா செய்திக்குறிப்பு: மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பருவ காலம் துவங்கியுள்ளதால் வட்டாரங்களில் ஆங்காங்கே மழை பொழிந்து வருகிறது.சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், நுண்ணுாட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஏ.டி.எம்., கார்டு, கூகுள் பே, போன்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தி பெறலாம்.எனவே வேளாண் விரிவாக்க மையம் மூலம் இடுபொருட்களை வாங்க வரும் விவசாயிகள் இடுபொருட்களுக்கான முழுத்தொகை அல்லது பங்களிப்பு தொகையை செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்று பயனடையலாம், என்றார்.