உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டிரைவர் வெட்டிக்கொலை

டிரைவர் வெட்டிக்கொலை

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த லோடு வேன் டிரைவர் காளிக்குமாரை 33, வெட்டி கொன்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் 33. லோடு வேன் டிரைவர். நேற்று தனது வேனில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு திருச்சுழி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கேத்தநாயக்கன் பட்டி விலக்கு அருகில் வேனை 2 பைக்குகளில் வந்த கும்பல் வழி மறித்தது. வேனில் இருந்து இறங்கிய காளிகுமாரை வெட்டிவிட்டு கும்பல் ஓடி விட்டது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ