உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீரரை கொன்று கொதிக்கும் தாரில் மூழ்கடித்த நண்பர்கள்

வீரரை கொன்று கொதிக்கும் தாரில் மூழ்கடித்த நண்பர்கள்

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேலஅழகியநல்லுாரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரைப்பாண்டி, 62. சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் குடும்பத்தினருடன் வசித்தார். ஜன., 27ல் மாயமானார்.மார்ச் 5ல் துரைப்பாண்டியின் நண்பர்களான விருதுநகர், ஒண்டிப்புலிநாயக்கனுார் ராம்குமார், மேல அழகியநல்லுார் பாண்டி ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.இதில், காரியாபட்டி, ஜோகில்பட்டியில் தார் பிளான்ட்டில் வேலை செய்து வந்த ராம்குமாரும், பாண்டியும், துரைப்பாண்டிக்கு கார் வாங்கி கொடுத்து, அதிக கமிஷன் எடுத்துள்ளனர். அதை அறிந்து, போலீசில் புகார் கொடுக்கப்போவதாக துரைப்பாண்டி மிரட்டியதால், ஆத்திரமடைந்து அவரை கட்டையால் அடித்து கொலை செய்து, கொதிக்கும் தாரில் மூழ்கடித்தது விசாரணையில் தெரிந்தது. நேற்று தாரை சூடேற்றி, துரைபாண்டி எலும்புகளை போலீசார், 20 மணி நேரம் போராடி கண்டறிந்தனர். இருவரிடமும் குன்றக்குடி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி