சிறுமியை சீண்டியவர் போக்சோவில் கைது
சிவகாசி : சிவகாசியை சேர்ந்த 10 வயது சிறுமி தினமும் அவரது பாட்டி வீட்டில் துாங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அதே போல் சிறுமியை தனது வீட்டில் துாங்க வைப்பதற்காக பாட்டி கூட்டிச் சென்றார். ஆயில் மில் காலனியைச் சேர்ந்த தங்கவேல் அவரது மனைவி ஆகியோர் வரும்போது சிறுமியின் பாட்டியும் தங்கவேலின் மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தங்கவேல் சிறுமியை இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.