உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ.5 கோடி கையாடல் தபால் ஊழியர் சிக்கினார்

ரூ.5 கோடி கையாடல் தபால் ஊழியர் சிக்கினார்

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சூலக்கரை மகாத்மா காந்திநகரைச் சேர்ந்தவர் அமர்நாத், 38; சிவகாசி தலைமை தபால் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். அங்கிருந்து அயற்பணியாக அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அலுவலக பணம், 5 கோடி ரூபாயை தன் வங்கி கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்தார்.கடந்த 2024 மே 18ல் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அமர்நாத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 4 கோடியே 58 லட்சத்து 90,068 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ