வி.சி., ஆர்ப்பாட்டம்
விருதுநகர், மே 17 - விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காரியாபட்டி குரண்டியில் வி.சி., முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் விஜயகுரு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யவும், நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி வி.சி., சார்பில் மாநில துணை பொது செயலாளர்கள் இன்குலாப், கனியமுதன், வில்லவன், கோதை, கலைவேந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.