உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி இ.பி., காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கிஅலுவலர் ஜெயராமன் மனைவி லலிதா 62. இவர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று காலை 6:40 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனின் கடைசி பகுதியில் நடை பயிற்சியில் இவர் ஈடுபட்டிருந்த போது பின்னால் வந்த வாலிபர் அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி விட்டார். விருதுநகர் ரயில்வே போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை