மேலும் செய்திகள்
விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
20-Aug-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற ஊழியர்கள் 2 அரசு பஸ்களை ஜப்தி செய்தனர். அருப்புக்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன், 45,. இவர் 2018, மார்ச் மாதத்தில் அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தபோது மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியதில் பலியானார். இதுகுறித்து சப் கோர்ட்டில் நடந்த வழக்கில் 2022ல், இவருடைய மனைவி ஜெயபாரதிக்கு வழக்கு செலவுடன் சேர்த்து அரசு போக்குவரத்து கழகம் ரூ.31 லட்சத்து 53 ஆயிரத்து 611 ரூபாய் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தர விட்டது. ஆனால் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததையடுத்து சப் கோர்ட் நீதிபதி சதீஷ் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த 2 அரசு பஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
20-Aug-2025