உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் ஒரே நேரத்தில் பறந்த 3 விமானங்கள்

ஸ்ரீவி.,யில் ஒரே நேரத்தில் பறந்த 3 விமானங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று காலை 11:10 மணிக்கு 3 விமானங்கள் பறந்ததை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் தென்கிழக்கு பகுதியில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி ஒன்றுக்கொன்று இணையாக 2 விமானங்களும், அதன் பின்பு ஒரு விமானமும் ஒரே நேரத்தில் வானில் பறந்தன. எப்போதுமே ஒரு விமானம் மட்டுமே பறக்கும் நிலையில் நேற்று வழக்கத்திற்கு மாறாக 3 விமானங்கள் வானில் பறந்ததை பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ