உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் சிவன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

விருதுநகர் சிவன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

விருதுநகர்; விருதுநகரில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி பிரமோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு கொடிப்பட்டம் விருதுநகரில் மெயின் பஜார், மேலத்தெரு, ரதவீதிகளை சுற்றி வந்து கொடியேற்றம் செய்யப்பட்டது. சுவாமி திருவிழா மண்டபத்தில் எழுந்தருளினார். தினசரி இரவு அன்ன வாகனம், கைலாச வாகனம், நந்தி, குதிரை, சிங்கம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. செப். 2ல் திருக்கல்யாணம், செப்.3ல் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி