தேனீ வளர்ப்பு கருத்தரங்கு
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு நடந்தது.தேசிய தேனீ வாரியம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை இணைந்து நடத்திய கருத்தரங்கில் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை இயக்குநர் சாந்தி இணைய வழி மூலம் தலைமை உரையாற்றினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் வரவேற்றார். வேளாண் இணை இயக்குநர் விஜயா , தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, உட்பட பலர் பேசினர். தேனிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சி நடந்தது. பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.