உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் காமதேனு, கைலாச பர்வத, வேதாள, யானை, ரிஷப உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இன்று கயர் குத்து திருவிழாவும், மே 9ல் தேரோட்டமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ