உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டிப்பர் லாரி மோதி கொத்தனார் பலி

டிப்பர் லாரி மோதி கொத்தனார் பலி

நரிக்குடி:நரிக்குடி குறவைகுளத்தைச் சேர்ந்த பசுபதி 32, கொத்தனாராக வேலை செய்தார். நேற்று வேலையை முடித்துவிட்டு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வீடு திரும்பினார். இரவு 9:30க்கு நரிக்குடி திருப்புவனம் ரோட்டில் ஆண்டுகொண்டான் அருகே சென்றபோது ரோட்டோரமாக நின்றிருந்த டிப்பர் லாரியில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். லாரி டிரைவர் தப்பி விட்டார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !